மன்னார்குடி விநாயகர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள விநாயகர் கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.
மன்னார்குடியில் உள்ள ஒற்றைத் தெருவில் ஆனந்த வினாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மன்னார்குடி காவல் நிலையத்திற்கு ஒரு மர்மக்கடிதம் வந்தது.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபிநவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. குணசேகரன், சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் காவலர்கள் மோப்பநாய் சகிதமாக நள்ளிரவு நேரத்தில் அந்த கோவிலுக்கு சென்று வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
சோதனைக்கு பிறகு கோயிலில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications