திருசெந்தூரில் இன்று தலைவர்கள் சூறாவளி பிரசாரம்: 2,000 போலீசார் குவிப்பு
திருசெந்தூர் தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதுவதால் தொகுதி முழவதும் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரம் தூள் பறக்கிறது.
தேர்லுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திருசெந்தூர் தொகுதியில் மொத்த தமிழக அரசும் முகாமிட்ட அனிதாவுக்கு தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. அதிமுக தரப்பில் முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எமபிக்கள் என பெரும் படையே தீவிர பிரசாரத்தி்ல் ஈடுபட்டுள்ளது.
தேமுதிகவினர் இரு கட்சியினருக்கும் ஈடு கொடுக்க முடியாமல் தன் வழி தனி என்ற கொள்கையோடு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருசெந்தூர் தொகுதியை தக்க வைக்க வேண்டுமேன அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 கட்சி தலைவர்களும் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொது செயலாளர் அன்பழகன், மத்திய அமைச்சர் அழகிரி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, உள்ளிட்டோர் திருசெந்தூர் தொகுதியில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதால் தொகுதி முழுவதும் கார்களின் பவனி, எங்கு பார்த்தாலும் வெளி மாவட்ட தொண்டர்கள் வெள்ளை, வேட்டி சட்டையில் நிரம்பி வழிகின்றனர்.
மேலும் இன்று தொகுதியில் தலைவர்களின் முற்றுகையால் அசம்பாவிதம் ஏற்படாதவாறு நெல்லை டிஐஜி தலைமையில் தெனமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் போலீசார், 240 துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அனல் பறக்கும் பிரசாரத்தால் தொகுதி மக்கள் அச்சத்தோடு வலம் வருகின்றனர். தொகுதி முழுவதும் கரன்சி மழை பெய்ய துவங்கியுள்ளது.