தினகரனுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம்?
பாஜக, இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாடி ஆகிய கட்சிகளை உள்ளிட்ட உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் இதில் கையெழுத்திடவில்லை.
நீதிபதி தினகரன் உள்ளிட்ட 5 நீதிபதிகள் உச்ச நீதிமன்றநீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்நிலையில் நீதிபதி தினகரன் மீது நில ஆக்கிரமிப்புதொடர்பாக புகார் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது பதவி உயர்வு தொடர்பான பரிந்துரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ராஜ்யசபாவைச் சேர்ந்த 66 எம்பிக்கள் கையெழுத்திட்டு அவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜ்யசபா விதிகளின்படி கண்டனத் தீர்மானம் கொண்டு வர குறைந்தது 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்டாலே போதுமானது.
எனவே அடுத்த வாரத்தில் தினகரன் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதனால் தினகரன் பதவி விலகும் நிலை ஏற்படும்.
இந் நிலையில் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையி்ல், ஒரு நீதிபதிக்கு எதிரான புகார் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.