For Daily Alerts
Just In
வலிய வந்து ஆதரவு தரும் பாமக - துரைமுருகன் கிண்டல்
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பா.ம.க -வினர் தாங்களே முன்வந்து பிரசாரம் செய்து வருகின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வந்தவாசி வந்த துரைமுருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வந்தவாசி தொகுதியில் தி.மு.க -வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க தான் வெற்றி பெறும்.
எங்களு்ககு பா.ம.க -வினருடன் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், அனைத்து இடங்களிலும் பா.ம.க -வினர் தாங்களே முன் வந்து, தி.மு.க-வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதாக, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனால், மேல் மட்டத்தில் திமுக - பாமக கூட்டணி தொடர்பாக, எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்றார்.
Comments
Story first published: Sunday, December 13, 2009, 15:21 [IST]