நாளை வந்தவாசியில் ஜெயலலிதா பிரசாரம்
வந்தவாசி: வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி. முனுசாமியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை பிரசாரம் தொடங்குகிறார்.
2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருச்செந்தூரில் 2 நாள் சூறாவளிப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. இந்தப் பிரசாரத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார்.
நாளை அவர் வந்தவாசி தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். இங்கும் 2 நாள் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை மதியம் ஹெலிகாப்டரில் ஜெயலலிதா வந்தவாசி செல்கிறார். அங்கு அவர் அதிமுக வேட்பாளர் பி.முனுசாமியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முதல் நாள் பிரசாரத்தை முடித்து விட்டு காஞ்சிபுரம் சென்று அங்கு தங்குகிறார்.
திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனின் துரோகம், மீனவர்களுக்கு திமுக அரசும், மத்திய அரசும் செய்த பாதகங்களை முக்கியப்படுத்தி பேசினார் ஜெயலலிதா.
இந்த நிலையில் வன்னியர் பெல்ட்டான வந்தவாசியில் பாமகவை சாடி அவர் பேசக் கூடும் எனத் தெரிகிறது.