திருவண்ணாமலை: ரூ. 70 லட்சம் நகை கொள்ளை
திருவண்ணாமலை: நகைக்கடை மேற்கூரையில் துளையிட்டு ரூ.70 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுளளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திருவண்ணாமலை தேரடி வீதியில் வி.பி.சி.ஜூவல்லர்ஸ் நகைக்கடை நடத்தி வருபவர் சுமன். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமன் இரவு 8 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை 9 மணியளவில் வழக்கம் போல் சுமன் கடையை திறந்தார். அப்போது ஷோக்கேசில் அலங்காரமாக வைக்கப்பட்டு இருந்த ஆரம், ஒட்டியாணம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையினுள் சென்று பார்த்த போது, மேற்கூரையில் இரண்டு பக்கத்தில் துளையிட்டு மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து கடையில் இருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, நகை கடை உரிமையாளர் சுமன் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கடையில் இருந்த லாக்கரை உடைக்காமல் ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுளளனர்.












Click it and Unblock the Notifications