மீண்டும் தபஸ்குமாரே நியமனம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக தபஸ்குமாரை நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் மண்டல போலீஸ் ஐ.ஜி கிருஷ்ணமூர்த்தி ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தன.
இதனால், அந்தப் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, தென்மண்டல ஐ.ஜி.யாக தபஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் நடந்த இடைத்தேர்தலின் போது, மாநகர கமிஷனர் மாற்றப்பட்ட போதும், தபஸ்குமார் தான் மாற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications