For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோசடி பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு புது சிக்கல்!

By Staff
Google Oneindia Tamil News

Sumathy Ravichandran
சென்னை: தவறான தகவல்களைத் தெரிவித்து, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் வீட்டு மனை பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி முன்னாள் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரனுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்தவர் சுமதி ரவிச்சந்திரன். பெருமளவில் ஊழல் செய்ததாக கைதாகி, ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். இவருக்கு ரூ. 50 கோடியளவுக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் அப்பழுக்கற்ற அரசு ஊழியருக்கான அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இவர் வீட்டு மனை பெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் முகப்​பேர் ஏரி திட்​டத்​தில் உள்ள உயர் வரு​வாய் பிரிவு மனை கடந்த ஆண்டு இவருக்கு ஒதுக்​கப்​பட்​டது.​ 405 சதுர மீட்​டர் பரப்​ப​ள​வுள்ள அந்த மனைக்​கான தொகையாக ரூ.​ 62.33 லட்​சத்தை சுமதி ரவிச்​சந்​தி​ரன் 5 தவணைகளில் செலுத்​தி​னார்.​ இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி ஊழல், முறைகேடு, லஞ்ச வழக்கில் சுமதி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து லஞ்​சப் புகா​ரில் கைதான சுமதி ரவிச்​சந்​தி​ர​னுக்கு எந்த அடிப்​ப​டை​யில் 'அப்​ப​ழுக்​கற்ற அரசு ஊழி​யர்' என்​று கூறி மனை ஒதுக்​கப்​பட்​டது என்​று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, 'அப்​ப​ழுக்​கற்ற அரசு ஊழி​யர்' என்று யாரை​யும் சான்​ற​ளிக்​கும் வழக்​கம் தங்​கள் துறை​யில் நடை​மு​றை​யில் இல்லை என
வெளி​யு​ற​வுத் துறை​யின் பாஸ்​போர்ட் பிரிவு தலை​மை​ய​கம் பதில் அளித்​தது.​

இதன் பின் ரூ.​ 62.33 லட்​சத்​தில் மனை வாங்​கு​வ​தற்கு அவ​ரி​டம் இருந்த வரு​வாய் ஆதா​ரங்​கள் குறித்து 'பேக்ட் இந்​தியா' அமைப்பு சார்​பில் தக​வல் பெறும் உரிமை சட்​டத்​தின் கீழ் கேள்​வி​கள் கேட்​கப்​பட்​டன.​ அப்​போது,​​ தனது கண​வர் ரவிச்​சந்​தி​ர​னின் பெய​ரில் கீழ்ப்​பாக்கத்​தில் இருந்த வீட்டை வங்​கி​யில் அடகு வைத்து பெற்ற பணத்தை முகப்​பே​ரில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட மனைக்​கான தொகை​யாக செலுத்​தி​ய​தாக சுமதி ரவிச்​சந்​தி​ரன் தரப்​பில் அரசுக்கு தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது தெரி​ய​வந்​தது.​

இதையடுத்து முகப்​பேர் கோட்ட செயற் பொறி​யா​ளர் வாரிய மேலாண்மை இயக்​கு​ந​ருக்கு கடந்த செப்​டம்​ப​ரில் கடி​தம் அனுப்​பி​னார்.​ தில்,​ சுமதி ரவிச்​சந்​தி​ரன் அப்​ப​ழுக்​கற்ற அரசு ஊழி​யரா என்​பது குறித்து இப்​போ​தைய சூழ​லில் அர​சு​தான் முடிவு செய்ய வேண்​டும்.​

மனை ஒதுக்​கீட்​டிற்​காக சுமதி ரவிச்​சந்​தி​ரன் சமர்​பித்த மனுவில்,​​ தனது கண​வர் பெய​ரில் வீடு இருப்​ப​தாக குறிப்​பி​டப்​ப​டவில்லை.​ ஆனால்,​​ அவ​ரது கண​வர் பெய​ரில் உள்ள வீட்​டின் மீது கடன் பெற்​றி​ருப்​பது தெரிய வந்​துள்ள நிலை​யில் இது குறித்​தும் அர​சு​தான் முடிவு எடுக்க வேண்​டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நாட்​டின் எந்​தப் பகு​தி​யி​லும் எங்​க​ளுக்கு சொந்​த​மான வீடு,​​ மனை,​​ குடி​யி​ருப்பு இல்லை என்று எழுத்​து​ மூலம் உறுதி அளித்​துள்​ளீர்​கள்,​​ ஆனால்,​​ கண​வர் பெய​ரில் உள்ள வீட்​டினை அட​மா​னம் வைத்து ரூ.​ 25 லட்​சம் கடன் பெற்ற விவ​ரம் இப்​போது தெரிய வந்​துள்​ளது.​ எனவே,​​ வீட்​டு​வ​சதி வாரி​யத்​துக்கு உண்​மைக்கு மாறான தக​வல்​கள் அளித்து மனை ஒதுக்​கீடு பெற்​றது குறித்து உரிய
விளக்​கம் அளிக்க வேண்​டும்.​

மேலும்,​​ அப்​ப​ழுக்​கற்ற அரசு ஊழி​யர் என்​ப​தற்​கான சான்​றி​தழை இது​வரை சமர்ப்​பிக்​க​வில்லை.​ இத​னை​யும் அனுப்பி வைக்க வேண்​டும் என வீட்​டு​வ​சதி வாரி​யத்​தின் முகப்​பேர் கோட்ட செயற்​பொ​றி​யா​ளர் எம்.​ ராம​கி​ருஷ்​ணன் சுமதி ரவிச்​சந்​தி​ர​னுக்கு அனுப்​பி​யுள்ள கடி​தத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார்.​

சுமதி ரவிச்சந்திரன் ஒரு உதாரணம்தான். இதுபோல மேலும் பல உயர் அதிகாரிகள் மோசடியாக வீட்டு மனை பெற்று அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு ஆப்பு வைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X