ராஜபக்சே திருப்பதிக்கு வந்து போனதால்தான் ஆந்திராவுக்கு இன்று சோதனை - வைணவத் துறவி
ஹைதராபாத்: மனித அரக்கனான ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலியானார். இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உலகின் கொடும் அரக்கன்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் ராஜபக்ச! இந்த அரக்கனுக்கு உதவி செய்தவை இந்திய பார்ப்பனியம், அமெரிக்க மற்றும் சீனாக்காரர்கள்.
ராஜபக்ச இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார். முதல் முறை வந்தார். இறுதி யுத்தக் கட்ட காலங்களில், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார் ஆந்திர முதலமைச்சர்.
இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் ராஜபக்ச. இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும்.
ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டம் நடந்தது கிடையாது. அந்த அளவிற்கு மிகப் பெரும் உலகப் பாவி இந்த ராஜபக்ச.
தமிழர்களின் எல்லை தெய்வம் ஏழு மலையான். அவரால் ராஜபக்சேவின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ளவில்லை, இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
ராஜபக்சே, திருப்பதி வர அனுமதி வழங்கிய ஆந்திர அரசுக்கு தகுந்த தண்டனையை வழங்கி இருக்கிறார் திருப்பதியின் ஏழுமலையான்! இன்னும் என்னென்ன நடக்குமோ.
இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது.
ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை.
எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஆந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.
எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications