குருப்பெயர்ச்சி-ஆலங்குடி கோவிலில் பக்தர்கள் வழிபாடு
குரு பரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
இந் நிலையில் நேற்று இரவு 11.59 மணிக்கு குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதையொட்டி ஆலங்குடி கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு உலக நன்மைக்காக மகா குரு பரிகார யாகம் நடைபெற்றது.
இதையடுத்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில்
சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டன.
தங்கக் கவச அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.
நேற்றும் இன்றும் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, குரு பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.