மார்ச் 1ல் பிளஸ்டூ தேர்வு தொடக்கம்- மார்ச் 23 முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு
தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
பிளஸ்-2 தேர்வு அட்டவணை:
2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.
2 - தமிழ் இரண்டாம் தாள்.
4 - ஆங்கிலம் முதல் தாள்.
5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்
11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல்,நர்சிங்(ஜெனரல்), புள்ளியியல்.
15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்
17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.
19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
22 - வணிகவியல், மனையியல், புவியியல்
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 23 -தமிழ் முதல்தாள்.
24 - தமிழ் இரண்டாம் தாள்.
26 - ஆங்கிலம் முதல்தாள்.
29 -ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
மெட்ரிக்குலேஷன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ் முதல் தாள்
24 - தமிழ் இரண்டாம் தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்
9 - புவியியல் மற்றும் பொருளாதாரம்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - மொழித்தாள்
25 - ஆங்கிலம் முதல் தாள்
26 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
29 - கணிதம் முதல் தாள்
30 - கணிதம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1 - அறிவியல் முதல் தாள்
5 - அறிவியல் இரண்டாம் தாள்
7 - வரலாறு மற்றும் குடிமையியல்.
9 - புவியியல்
ஓ.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
மார்ச் 23 - தமிழ்.
24 - மொழித்தாள்-1 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
26 - ஆங்கிலம் முதல்தாள்
27 - மொழித்தாள்-2 சமஸ்கிருதம் மற்றும் அரபி.
29 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1 - கணிதம்.
3 - சிறப்பு மொழித்தாள்-3, சமஸ்கிருதம் மற்றும் அரபி.
5 - அறிவியல்.
7 - சமூக அறிவியல்.
தேர்வு நேரம்:
பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடைபெறும்.
பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12-45 மணிக்கு முடியும்.
வினாத்தாள் கொடுக்கப்பட்டவுடன் அதை படித்துப் பார்க்க கால் மணி நேரம் அவகாசம் தரப்படும்.
எத்தனை பேர் எழுதுகிறார்கள்...
பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 53 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் பள்ளிகள் மூலம் எழுதும் நேரடித் தேர்வர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 93 ஆயிரம் பேர் ஆவர். தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 60 ஆயிரம் பேராகும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். மெட்ரிகுலேஷன் 10-வது வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
ஆங்கிலோ இந்தியன் தேர்வை 5 ஆயிரம் பேர்களும், ஓ.எஸ்.எல்.சி.தேர்வை 1,500 பேர்களும் எழுதுகிறார்கள். பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் சேர்த்து மொத்தம் 19 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.