தீட்சிதர்கள் வழக்கு-தமிழக அர​சுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்​டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கெண்டத எதிர்த்து தீட்சிதர்கள் தாக்தல் செய்துள்ள வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோடீஸ் அனுப்பியுள்ளது.

சி​தம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை இந்து அற​நி​லை​யத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்​துக் கொண்​டதை எதிர்த்து
தீட்​சி​தர்​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​மு​றை​யீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ளது.

இந்த வழக்கு நீதி​ப​தி அல்​டா​மஸ் கபீர்,​​ நீதி​ப​தி ஜி.எஸ்.சிங்வி ஆகி​யோர் முன்​ விசா​ரணைக்கு வந்தது.

தீட்சிதர்கள் சார்​பில் வழக்​க​றி​ஞர்​கள் சி.எஸ்.​ வைத்​தி​ய​நா​தன்,​​ பிந்து கே.நாயர் ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர். அவர்கள் வாதாடுகையில்,

தமிழ்​நாடு இந்து அற​நி​லை​யத் துறை சட்​டம் 1959ன் படி தமி​ழக அர​சின் முடிவு அதி​கா​ரத்​துக்கு அப்​பாற்​பட்​டது.
நூற்​றாண்​டு​க​ளுக்​கும் மேலாக இக்​கோ​யில் பொது தீட்​சீ​தர்​க​ளின் கட்​டுப்​பாட்​டில்​தான் இருந்​து​வந்​தது.​ அவர்​கள் பரம்​பரை தர்​ம​கர்த்​தா​வா​க கோயி​லின் நிர்​வா​கப்
பொறுப்​பை கவ​னித்​து​ வந்​த​னர்.

ஆனால் ஹிந்து அற​நி​லை​யத் துறை சட்​டம் 1959ன் படி,​​ பிரிவு 45-ன் கீழ் இக்​கோ​யிலை தமி​ழக அரசு தன் வசம் எடுத்​துக்​ கொண்​டதை ஏற்​க ​மு​டி​யாது.​ தமி​ழக அர​சின் முடிவு அர​சி​ய​ல​மைப்​புச் சட்​டத்​துக்கு அப்​பாற்​றப்​பட்டது என்றனர்.

த​மி​ழக அர​சின் சார்​பில் வழக்​க​றி​ஞர் நெடு​மா​றன் ஆஜராகி இந்த மனு​வுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தார்.​

இரு​ த​ரப்பு வாதங்​க​ளை​யும் கேட்ட நீதி​ப​தி​கள்,​​ தமி​ழக அரசு,​​ தமிழ் வளர்ச்​சித் துறை,​​ இந்து அற​நி​லை​யத் துறை ஆணை​யர் ஆகி​யோ​ருக்கு நோட்​டீஸ் அனுப்ப உத்​த​ர​விட்​ட​னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+