செம்மொழி மாநாடு-கோவையில் திருமணங்களை தவிர்க்க கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் சமயத்தில் கோவையில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அமைச்சரும், மாநாட்டு இட ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

செம்மொழி மாநாடு நடைபெறும் சமயத்தில், கோவையில் உள்ள உள்ள 150 தனி​யார் திரு​மண மண்​ட​பங்​கள் மற்​றும் மாந​க​ராட்சி திரு​மண மண்​ட​பங்​கள் மாவட்ட நிர்​வா​கத்​தின் பொறுப்​பில் எடுத்​துக் கொள்​ளப்​ப​டும் என்​றும் அவர் கூறியுள்ளார்.

திரு​மண மண்​ட​பங்​கள் கிடைக்​காமை,​​ உற​வி​னர் வந்து செல்​வ​தில் ஏற்​ப​டும் இடர்​பா​டு​கள் ஆகி​ய​வற்​றைத் தவிர்க்​கும் வகை​யில் முன்​னேற்​பா​டாக வேறு தேதி​களை தேர்வு செய்து கொள்​ளு​மாறும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநாட்டு இட ஏற்​பாட்​டுக் குழு​வின் ஆலோ​ச​னைக் கூட்​டம் அமைச்​சர் பழ​னி​சாமி தலை​மை​யில் ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​

குழு​வின் துணைத் தலை​வர்​களான முன்​னாள் எம்பி மு.ராம​நா​தன்,​​ திருப்​பூர் ஏற்​று​ம​தி​யா​ளர்​கள் சங்​கத் தலை​வர் ஏ.சக்​தி​வேல்,​​ ஒருங்​கி​ணைப்​பா​ளர்​கள் மாவட்ட ஆட்​சி​யர் பி.உமா​நாத்,​​ மாந​க​ராட்சி ஆணை​யர் அன்​சுல் மிஸ்ரா,​​ உறுப்​பி​னர்​கள் பார​தி​யார் பல்​க​லைக்​க​ழக துணை​வேந்​தர் சி.சுவா​மி​நா​தன்,​​ பதி​வா​ளர் பொ.திரு​மால்​வ​ள​வன்,​​ கோவை அண்ணா பல்​க​லைக்​க​ழக பதி​வா​ளர் எஸ்.பழ​னி​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

கூட்டத்திற்குப் பி்ன்னர் அமைச்சர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டுக்கு வரும் தமி​ழ​றி​ஞர்​கள்,​​ வெளி​நாட்டு விருந்​தி​னர்​கள்,​​ நிகழ்ச்​சி​கள் நடத்​து​வோர், பொது​மக்​கள் என அனைத்​துத் ​தரப்​பி​ன​ருக்​கும் தங்​கும் இட வச​தி​கள் செய்​து​த​ரப்​ப​டும்.​

கோவை மாந​க​ரம் மற்​றும் நக​ரை​யொட்​டிய பகு​தி​க​ளில் குளிர்​சா​தன வச​தி​யு​டன் கூடிய 2 ஆயி​ரம் அறை​க​ளும்,​​ குளிர்​சா​தன வசதி இல்​லாத ஆயி​ரம் அறை​க​ளும் முன்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளன.​ இதைத் தவிர பல்​வேறு அர​சுத் துறை​க​ளின் விருந்​தி​னர் இல்​லங்​கள்,​​ புதி​தாக துவங்​கப்​பட உள்ள நட்​சத்​திர ஹோட்​டல்​கள் என ஏறத்​தாழ 4 ஆயி​ரம் அறை​கள் முன்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளன.​

மேலும் மாந​க​ரப் பகு​தி​யில் உள்ள 150 தனி​யார் திரு​மண மண்​ட​பங்​கள் மற்​றும் மாந​க​ராட்சி திரு​மண மண்​ட​பங்​கள் மாநாடு நடை​பெ​றும் நாள்​க​ளில் மாவட்ட நிர்​வா​கத்​தின் பொறுப்​பில் எடுத்​துக் கொள்​ளப்​ப​டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+