லாலு சொன்னது 'டுபாக்கூர்': மம்தா வெள்ளை அறிக்கை
டெல்லி: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே துறை பொருளாதார வெள்ளை அறிக்கையை இன்று இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.
கடந்த ஆட்சியில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே துறை பொருளாதாரம் வளமாக இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால் இதை மறுத்த மம்தா பானர்ஜி, உண்மையான நிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பார்லிமெண்டில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி.
முன்பு ரூ.90,000 கோடி உபரி நிதியாக ரயில்வே துறையில் இருந்ததாக லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். ஆனால் மம்தாவோ அதை மறுத்துள்ளார்.
ஊதியக் குழு பரிந்துறையின் பேரில் கடந்த ஆண்டு ரூ.13,600 கோடியும் இந்த ஆண்டு ரூ.2,600 கோடியும் செலவு செய்தது போக உண்மையில் ரூ.8.361 கோடி உபரி நிதி மட்டுமே உள்ளதாக மம்தா தெரிவித்துள்ளார். இதற்கான விவரங்கள் முழுமையாக இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
லாலு காலத்தில் பல அதிகார மீறல்கள் நடந்திருப்பதாகவும், தவறான கணக்குகள் காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரயில்வே துறை மூத்த அதிகாரிகைக் கொண்டு இந்த வெள்ளை அறிக்கையை அவர் தயாரித்துள்ளார்.
லாலு கடும் எதிர்ப்பு:
மம்தாவின் இந்த வெள்ளை அறிக்கை புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த அறிக்கையை லாலு கட்சியினர் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.