For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனில் காசோலைக்கு 2018ல் முற்றுப்புள்ளி

By Staff
Google Oneindia Tamil News

Cheque
லண்டன்: பிரிட்டனில் வரும் 2018ம் ஆண்டு முதல் காசோலை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என இங்கிலாந்து பேமென்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

பணம் செலுத்தும் முறைகளில் நவீன மற்றும் மேலும் திறன் மிக்க வழிமுறைகளை கையாள ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலும் பணம் செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளே பயன்பாட்டில் உள்ளது.

எனினும் பிரச்னைகள் மிகுந்த காசோலை முறையை ஒழிக்க திட்டமிடப்பட்டது. பிரிட்டனின் நிதித் துறை நிறுவனங்களை உள்ளடக்கிய பேமென்ட் கவுன்சில் இதற்கான தீர்மானத்தை ஒருமித்தக் கருத்துடன் நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, வரும் 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை தான் காசோலைகளுக்கு மதிப்பு. அதன் பிறகு அவை மதிப்பற்றதாக கருதப்படும். 350 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காசோலை பயன்படுத்தும் முறை அத்துடன் காலாவதியாகி விடும்.

இதுகுறித்து கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி பால் ஸ்மீ கூறுகையில், '21ம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள தொழில்நுட்ப சூழலில் பேப்பர் மூலம் பணம் செலுத்தும் முறையை விட பல திறன்மிக்க வசதிகள் சாத்தியப்படும்.

பொருளாதாரத் துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இது ஒரு வாய்ப்பு' என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X