அனிதா ராதாகிருஷ்ணன் கல்குவாரி சூறை
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே திருசெந்தூர் திமுக வேட்பாளர் அனித ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கல் குவாரி சூறையாடப்பட்டது. அங்கு நின்ற லாரிகள் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டன. இது சம்பந்தமாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருசெந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கல்குவாரி ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலத்தில் உள்ளது.
நேற்று நள்ளிரவு இங்கு 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கண்ணாடிகளை அடித்து நொருக்கியதோடு, பெட்ரோல் குண்டும் வீசினர். இதில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும் அந்த கும்பல் சிமிண்ட் குடோன், சைக்கிள் ஸ்டாண்ட், காவலாளி செட் ஆகியவற்றையும் தீ வைத்து எரித்தனர்.
மேலும் காவலாளி டேவிட் என்பவரும் தாக்கப்பட்டார். இதுதவிர கல்குவாரி மேலாளர் அலுவலகம், கம்யூட்டர் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். இதில் பல கம்யூட்டர்கள் சேதமடைந்தன.
அதன்பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி செந்தில்குமார், ஸ்ரீவைகுண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமன், மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து கல்குவாரி மேலாளர் கார்த்திகேயன் ஸ்ரீவைகுண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னதுரை உள்பட 10 பேரை குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.