For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை!.. சாமியாருக்கும்!!

By Staff
Google Oneindia Tamil News

Eswarakumar Swamiji and Hemalatha
சென்னை: சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று சாமியாருக்கும் மருத்துவ சோதனை நடத்தப்படவுள்ளது.

சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் மீது ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார். தன்னை ஆபாசப் படம் எடுத்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சாமியாரின் முன்னாள் கார் டிரைவர் ஆனந்தன், சாமியாரின் அடையாறு வீட்டு காவலாளி உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சாமியார் வீட்டு காவலாளி அளித்த வாக்குமூலத்தில்,

குருஜியை பார்ப்பதற்கு ஹேமலதாவை முதலில் டிரைவர் ஆனந்தன் அழைத்து வந்தார். அதன் பிறகு அவ்வப்போது ஹேமலதா வந்து செல்வார். அவர் அங்கு வந்து செல்வது பெரும்பாலும் யாருக்கும் தெரியாதது போல் இருக்கும்.

குருஜியை சந்திக்க ரகசியமாகவே ஹேமலதா வந்து செல்வார். அடையாறு வீட்டிற்கு மட்டும் 10 முறைக்கும் மேல் வந்து சென்றுள்ளார்.

அவர் குருஜியுடன் எப்படி பழகினார் அவர்களுக்குள் எப்படிப்பட்ட பழக்கம் இருந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு முறை ஹேமலதா தனது மகனுடனும் குருஜியை சந்திக்க வந்தார். அவர்களுக்குள் உள்ள உறவு பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் தியாகராயநகர் இந்தி பிரசார சபா காலனியில் ஈஸ்வர ஸ்ரீகுமார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களிடமும், அங்குள்ள காவலாளியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந் நிலையில் நேற்றிரவு ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை மாம்பலம் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று சாமியாருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சாமியாரிடம் விசாரணை நடத்தி விட்டு அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X