எலியால் தாமதமான ரியாத் விமானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: விமானத்துக்குள் எலி புகுந்ததால், டெல்லியில் இருந்து ரியாத்துக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் 24 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து திங்கள் கிழமை இரவு 8.20க்கு ரியாத் நோக்கி புறப்படுவதற்காக ஏர் இந்தியா விமானம் தயாராகிக் கொண்டிருந்தது.
அப்போது, உணவுப் பொருட்களை உள்ளே எடுத்துச் சென்ற ஊழியர்கள் விமானத்துக்குள் எலி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை முழுவதுமாக அடைத்து புகைமூட்டத்தை ஏற்படுத்தி எலியை கொன்று அப்புறப்படுத்தினர்.
இப்பணிகள் காரணமாக விமானம் தாமதமானது. நேற்று மாலை 6.55 மணிக்கு ரியாத்துக்கு புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications