திருச்செந்தூர்-ரூ.14.48 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம்
சென்னை: திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.14.48 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதையடு்த்து அந்தத் தொகுதிக்கு பயனளிக்கும் வகையிலான திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார்.
பொங்கல்-ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை:
இதற்கிடையே பொங்கல் மற்றும் தை மாதம் முதல் நாளையொட்டி ஏழைகளுக்கு ரூ.256 கோடி செலவில் இலவச வேட்டி, சேலை வினியோகிக்கப்படவுள்ளன.
சென்னையில் வரும் 1ம் தேதியன்று முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம், 1990ம் ஆண்டு முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டு ரூ. 256 கோடி ரூபாய்ச் செலவில் 3 கோடியே 28 லட்சம் பேருக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வாஜ்பாய்க்கு கருணாநிதி வாழ்த்து:
இந் நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி, அவருக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.