For Quick Alerts
For Daily Alerts
Just In
ஹைதராபாத் பயணத்தை ரத்து செய்தார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது ஹைதராபாத் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
வன்முறையின் பிடியில் சிக்கித் தவித்து வரும் ஹைதராபாத்துக்கு இன்று பிரதீபா பாட்டீல் வருவதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
டெல்லியில் பணிப்பளு இருப்பதால் ஹைதராபாத் பயணத்தை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால் ஹைதராபாத்தில் தெலுங்கானா போராட்டம் தொடர்பாக அமளிக்காடாக இருப்பதால் தனது பயணத்தை பிரதீபா ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
செகந்திரபாத் அருகே உள்ள பொல்லாரம் என்ற இடத்தில் ராஷ்டிரபதி நிலையம் உள்ளது. இந்தியாவில் ராஷ்டிரபதி பவன் தவிர்த்து உள்ள 3 குடியரசுத் தலைவர் மாளிகைகளில் இதுவும் ஒன்று. இங்கு வரவே பிரதீபா பாட்டீல் திட்டமிட்டிருந்தார்.
Comments
Story first published: Sunday, December 27, 2009, 12:22 [IST]