புத்தாண்டு: கலாட்டா செய்தால் பாடம் புகட்டுவோம்- இந்து முன்னணி எச்சரிக்கை
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரி்ல் நள்ளிரவில் அட்டகாசம் செய்வதை தடுக்க டிசம்பர் 31ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா.முருகானந்தம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆங்கிலப் புத்தாண்டு கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான பண்டிகை. இதற்காக அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை இந்த முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
ஆனால், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரி்ல் நள்ளிரவில் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதையும், பைக் ரேஸ் விடுவதையும், நடு இரவில் பட்டாசு வெடிப்பதையும், போதையோடு ரோட்டில் நின்று கொண்டு புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் பெண்களின் கைகளை பிடித்து இழுப்பதையும், இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாரத நாட்டின் பாரம்பரியத்துக்கேற்ப அமைதியான வழியில் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது.
இந்துக்களின் புத்தாண்டு எப்படி அமைதியாக ஆன்மீக ரீதியாக கொண்டாடப்படுகிறதோ அது போல் தான் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட வேண்டும்.
இதற்கு மாறாக நள்ளிரவில் கலாட்டா செய்பவர்களை கண்டால், இந்து முன்னணி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி தக்க பாடம் புகட்டுவார்கள் என்று இந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது.
மாநில அரசும், காவல்துறையும் புத்தாண்டு தினத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் டிசம்பர் 31ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும்.
நள்ளிரவு ஆபாச நடனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications