வார்த்தை, வாய்ப்பு, வயது- நெப்போலியன் 'பஞ்ச்'
திருச்சி: வாழ்க்கையில் வார்த்தை, வாய்ப்பு, வயது ஆகிய மூன்றும் ஒரு முறை போனால் திரும்ப கிடைக்காது. எனவே இதை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் நெப்போலியன் தத்துவார்த்தமாக பேசினார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தென்னிந்திய ஏசு சபை கல்வி நிறுவனங்களின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், 'கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் மிக குறைவு. இதனால் சுற்றுசூழல் பாதுகாப்பாக இருந்தது. தற்போது வாகனங்கள் அதிக அளவில் பெருகி விட்டது. அதில் இருந்து வெளிவரும் கரியமல வாயு சுற்றுசூழலை மாசுபடுத்துகிறது.
மேலும் உலகம் வெப்பமயமாகி கொண்டு இருக்கிறது. இதை தடுக்க நாம் அனைவரும் மரத்தை நட்டு வளர்க்க வேண்டும். மரங்கள் அதிக அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஆகையால் மரத்தை வளர்ப்போம், மனித நேயம் காப்போம்.
வாழ்க்கையில் வார்த்தை, வாய்ப்பு, வயது ஆகிய மூன்றும் ஒரு முறை தான் வரும். போனால் திரும்ப கிடைக்காது. இவற்றை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். வருங்கால சந்தியினருக்கு நல்ல வழிகளை நாம் தான் காட்ட வேண்டும்.
கனவு, வெற்றி, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றும் எதிர்பார்க்கமால் தானாக வரும். இவைகள் யாவும் நம் கையில் இல்லை. கடின உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை இருந்தால் மனிதன் வாழ்க்கையில் உயர முடியும்' என்றார்.












Click it and Unblock the Notifications