2 திமுக எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: திருநெல்வேலி திமுக எம்.எல்.ஏ மாலைராஜா, தென்காசி தொகுதி திமுக, எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை தொகுதி திமுக எம்.எல்.ஏ மாலைராஜா. இன்று அதிகாலை அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்காக அவர் வந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடலுக்கு என்ன பிரச்சினை, என்ன மாதிரியான பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன என்பது குறித்து மருத்துவமனை வட்டாரத்திலும், எம்.எல்.ஏ. தரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை.
அதிகாலையில், அரசு மருத்துவமனையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வந்து சேர்ந்திருப்பதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி எம்எல்ஏவும்..
இந் நிலையில் தென்காசி தொகுதி திமுக, எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் வன்னாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நெல்லை திமுக செயலாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.