For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீசாரை கண்டித்து தமுமுக திடீர் மறியல்

By Staff
Google Oneindia Tamil News

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் போலீசாரை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பிடாரிஅம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான பார் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் 27 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது.

இது சம்பந்தமாக திருக்கோவிலூர் சந்தப்பேட்டையை சேர்ந்த நூர்பாஷா (55)மகன் ஷாவித் (20) மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஷாவித்தை கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலை சென்றனர்.

ஆனால் ஷாவித் தந்தை நூர்பாஷா போலீசாரை கைது செய்விடாமல் தடுத்துள்ளார். எனினும், போலீசார் நூர்பாஷாவை கைது செய்து திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நூர்பாஷாவை பொய்யான புகாரில் போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரை உனே விடுவிக்க வேண்டும் என்றும் கோரி த.மு.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X