For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கிழக்கில் நிலநடுக்கம்-கட்டிடங்கள் விரிசல்

By Staff
Google Oneindia Tamil News

கெளஹாத்தி: கெளஹாத்தியில் இன்று பிற்பகல் 2.32 மணியளவில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மர் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியிருந்தது.

கெளஹாத்தி, ஷில்லாங், இம்பாலா, இடாநகர் மற்றும் வடக்கும் வங்காளப் பகுதிகளில் பூமி அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர்.

கௌஹாத்தி நகரில் நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் உள்ள அடுக்ககங்களில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டடு பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

இம்பாலாவிலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்கள் பூகம்ப பீதியடைந்து வீதிகளுக்கு ஒடிவந்தனர். இங்கு சுமார் 20 வினாடிகள் பூமி அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், கட்டிட இடிபாடுகளோ, உயிரிழப்போ எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆறாவது முறையாக வடகிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே போல வங்கதேசத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.7 என பதிவானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X