For Daily Alerts
Just In
புத்தாண்டில் பாமக பொதுக்குழுக் கூடுகிறது
சென்னை: பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 1ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்ட விளக்க முதல் பொதுக்குழு கூட்டம் ஜனவரி மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Tuesday, December 29, 2009, 16:26 [IST]