For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திலும் தனி ஈழ வாக்கெடுப்பு- வைகோ

By Staff
Google Oneindia Tamil News

Vaiko
தஞ்​சா​வூர்: கனடா, நார்வே நாடுகளில் நடத்தப்பட்டது போல, தனி ஈழத்துக்கு உள்ள ஆதரவை கண்டறியும் வாக்கெடுப்பை தமிழகத்திலும் நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்​சா​வூ​ரில் உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் 7வது ஆண்டு நிறைவு விழா மற்​றும் ஈழத் தமி​ழர் வாழ்​வு​ரி​மைக்​கான உல​கத் தமி​ழர் மாநாடு நடை​பெற்றது. நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்,

எந்தவொரு விடு​த​லைக்​கான போரும் தோற்​ற​தாக சரித்​தி​ரம் இல்லை.​ ஈழப் போரில் தற்​போது ஏற்​பட்​டுள்​ளது சிறு பின்​ன​டை​வு ​தான்.​

இலங்​கை​யில் தமி​ழர்​க​ளுக்கு நேர்ந்த கொடு​மையை போல வேறு எந்த இனத்​த​வ​ருக்​கும் நேர்ந்​த​தில்லை.​ இந்​தத் தமி​ழி​னப்
படு​கொ​லைக்கு இந்​திய அரசு துணை நின்​றது.​ திமுக அரசு வேடிக்கை பார்த்​தது.​

சுதந்​திர இறை​யாண்மை உள்ள,​​ மதச்​சார்ப்​பற்ற தனி ஈழ தேசம் அமைய வேண்​டும் என்று 1976ம் ஆண்டு,​​ வட்​டுக்​கோட்​டை​யில் செல்வா தலை​மை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​

இந்​தத் தீர்​மா​னத்​துக்கு நார்வே,​​ கனடா நாடு​க​ளில் உள்ள ஈழத் தமி​ழர்​கள் தற்போது வாக்​கெ​டுப்பு நடத்தி பெருத்த ஆத​ரவு அளித்​த​னர்.​​​ இந்த வாக்​கெ​டுப்​பின் நோக்​கத்தை நிறை​வேற்ற இலங்​கை​யி​டம் ஐ.நா.​ சபை வலி​யு​றுத்த வேண்​டும்.​

கனடா, நார்வே போல ஈழத் தமி​ழர்​க​ளைப் பாது​காக்க தமி​ழ​கத்​தி​லும் இது​போல வாக்​கெ​டுப்பு நடத்த வேண்​டும்.​

இலங்​கை​யில் ஈழத் தமி​ழர்​கள் மீது நிகழ்த்​தப்​பட்ட கொடூர கொலை​கள்,​​ மான​பங்​கம்,​​ கருக்​க​லைப்பு உள்​ளிட்​ட​வற்றை தமி​ழக மக்​க​ளி​டம் பிர​சா​ரம் செய்து,​​ தமி​ழீழ விடு​த​லைக்கு ஆத​ரவு திரட்ட வேண்​டும்.​

புது எழுச்​சி​யோடு பிர​பா​க​ரன் மீண்​டும் வரு​வார்.​ முன்​னை​விட அதி​நுட்​ப​மாக ஈழப் போரை அவர் வழி​ந​டத்​து​வார்.

நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?

இலங்கையில் தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் இந்திய அரசு பதில் கூறியே ஆக வேண்டும். இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வது.

மத்திய மற்றும் தமிழக அரசை நான் எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறானது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவோம் என்​றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X