திருச்சியில் விரைவில் 3ஜி சேவை அறிமுகம்
Subscribe to Oneindia Tamil

இத்தகவலை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பெரம்பலூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு முதல்வர் கருணாநிதி வரும் மார்ச் மாதம் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் 300 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ருபாய் மதிப்பீட்டில் துணை நகரம்அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வளர்ச்சிப் பணிகளை கருத்தில் கொண்டு, செல்போன்களில் வீடியோ மூலம் முகம் பார்த்து பேசும் வசதி கொண்ட 3ஜி சேவை திருச்சி மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications