பொங்கல் பொருட்களை இலவசமாக கொடுங்கள்- பாஜக கோரிக்கை
சென்னை: பொங்கல் பொருட்களை தமிழக அரசு இலவசமாக ரேஷனில் வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொங்கல் வைப்பதற்கு அடிப்படை தேவையாக இருக்கும் வெல்லம், சர்க்கரை ஆகியவற்றின் விலை வானத்தை தொட்டு கொண்டிருக்கிறது.
2 வாரங்களில் 1 குவிண்டால் வெல்லம் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 1 கிலோ வெல்லம் 58 ரூபாய் முதல் 62 வரை விற்கப்படுகிறது.
சர்க்கரை கடந்த பொங்கல் தினத்தின் போது 1 கிலோ ரூ.22க்கு விற்றது. இன்று இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இப்படி விலை ஏறினால் பொங்கல் பண்டிகை எப்படி இனிப்பாக அமையும்?
அதனால் பொங்கலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல சென்ற ஆண்டை போலவே பொங்கல் பொருட்களை இலவசமாக ரேஷன் கடைகளில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications