இந்தாண்டும் விலைவாசி உயரும்- ஐஎம்எப் அபாய மணி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்னும் கடுமையாக உயரும் என்று கணித்துள்ளது சர்வதேச நிதி நிறுவனமான ஐஎம்எப்.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2010-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மேம்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்து தரப்பிலும் தேவை கணிசமாக பெருகும். அதே நேரம் பல்வேறு பொருள்களின் விலையில் கடுமையான உயர்வைச் சந்தித்தே தீர வேண்டும்.
வளரும் நாடுகளில் தொழில்கள் விரைவான வளர்ச்சியை எட்டும். இந்த விலை உயர்வைத் தடுக்க முடியாது.
எனவே பொருள்களில் முதலீடு செய்வோருக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு உள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications