புத்தாண்டு - நெல்லையில் ரூ.1.50 கோடி மது விற்பனை
நெல்லை: நெல்லையில் புத்தாண்டை முன்னிட்டு ரூ.1.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மார்கழி குளிர் வாட்டி எடுப்பதால் குடிமகன்கள் பலர் பீரை மறந்து பிராந்திக்கு தாவியுள்ளனர்.
2010 புத்தாணடு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பிறப்பு என்றால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்றாகி விட்டது. மது இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டமா என்று எண்ணும் வகையில் புத்தாண்டை முன்னி்ட்டு மது விற்பனையும் சக்கை போடு போட்டுள்ளது.
இரவில் புத்தாண்டு பிறந்தாலும் பல இடங்களில் சீரியல் அலங்காரங்கள், ஆட்டம், பாட்டத்தால் பகல் போலவே காட்சியளித்தது. ஒரு சில பார்களில் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை குடிமகன்கள் குதூகலத்துடன் கொண்டாட நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கூடுதல் சரக்குகளை கொள்முதல் செய்து இருப்பு வைத்திருந்தது. இந்த சரக்குகள் கடந்த வாரமே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு ஒருநாள் மட்டும் நெல்லை மாவட்டத்தில் ரூ.1.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கமாக இது போன்ற கொண்டாடங்களில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது மார்கழி மாதம் அதிக குளிர் என்பதால் பீரை மறந்து பலர் பிராந்தியை ருசித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 1400 பெட்டிகள் பீர் ரகங்களும், 4 ஆயிரம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒரு நாளில் மட்டும் ரூ.11 லட்சத்து பீர் ரகங்களும், ரூ. 1 கோடியே 30 லட்சத்திற்கு பிராந்தி வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டிற்கு முந்தைய நாள் நெல்லை மாவட்டத்தில் 900 பெட்டிகள் பீர் வகைகளும், பிராந்தி, விஸ்கி போன்ற தாயாரிப்புகள் 3 ஆயிரத்து 300 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
இந்த இரண்டு நாட்களிலும் ரூ.2.50 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications