பெண்ணாகரத்தில் 28 ஆயிரம் வாக்களர் பெயர்கள் மாயம்- பாமக புகார்
தர்மபுரி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பெண்ணாகரம் சட்டசபை தொகுதியில் 28 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்று பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன் புகார் கூறியுள்ளார்.
பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், பெண்ணாகரத்தில் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், டி.எஸ்.பி மற்றும் தாசில்தார் பாரபட்சம் காட்டுகின்றனர்.
அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். மேலும், பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாகரம் தொகுதியில், 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3,567 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4,424 பேரும் என, மொத்தம் , இரண்டு லட்சத்து 7,991 பேர் இருந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 979 பேரும், பெண் வாக்காளர்கள் 87 ஆயிரத்து 557 பேரும் என, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 536 பேர் மட்டும் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிலரது சூழ்ச்சியால் வாக்காளர் பட்டியலில், 28 ஆயிரத்து 455 வாக்காளர்கள் பெயர் மாயமாகி உள்ளன. எனவே, இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications