தப்பி ஓடிய பாக். தீவிரவாதிகள் குறித்து துப்பு தந்தால் ரூ. 50,000 பரிசு - போலீஸ்

Subscribe to Oneindia Tamil

Pakistan Terrorists
டெல்லி: டெல்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தப்பி ஓடிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ. 50,000 பரிசு அளிக்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அப்துல் ரஸ்ஸாக், முகம்மது சாதிக், ரபாகத் அலி. மூன்று பேரும் 9 ஆண்டுளுக்கு முன்பு செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சிறைவாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மூன்று பேரும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படவிருந்தனர். அதற்கு முன்பு அவர்களை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது அங்கிரு்நது 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று பேரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் அருகாமை மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மூன்று பேர் குறித்த தகவல் கொடுப்போருக்கு ரூ. 50,000 பரிசு அளிக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. அவர்களுடைய புகைப்படங்களையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+