அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி மதுரையில் மாயம்
மதுரை: திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி மதுரையில் மாயமாகியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணின் தம்பி நித்தியானந்தம் (54). இவர் மதுரையில் வசித்து வருகிறார். சனிக்கிழமை காலை வாக்கிங் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் நித்தியானந்தம் கிடைக்கவில்லை.
இதையடுத்து நித்தியானந்தத்தின் மகன் ராமானந்தன், தல்லாகுளம் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பணம் பறிக்கும் கும்பல் நித்தியானந்தத்தை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஸ்ரீஜெயம் ரியல்ஸ் மற்றும் ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார் என்பவரும், மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி முருகேசன் ஆகியோரும் இதேபோலத்தான் காணாமல் போய் பின்னர் பணம் பறிக்கும் கும்பலிடமிருந்து அவர்களாகவே மீண்டு வந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications