கணவனை இழந்த தாய் 4 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கணவர் இறந்த துக்கத்தில் 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து வி்ட்டு தானும் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஓன்றில் புரோட்டா மாஸ்டராக பணி புரிந்தார். இவர் நோய் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறந்தார்.
கணவன் இறந்தபின்னர் ஆதரிக்க யாருமின்றி தர்மராஜின் மனைவி மனோன்மணி 5 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த மனோன்மணி குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

நேற்று தனது குழந்தைகளுக்கு எலி மருந்தை பாலில் கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். தனது 5 குழந்தைகளில் 4 பேருக்கு மட்டும் மனோன்மணி விஷம் கொடுத்தார். ஐந்தாவது குழந்தை பிறந்து எட்டுமாதமே ஆவதால் அதை கொல்ல மனமில்லாமல் விட்டுவிட்டார்.

விஷமருந்திய சில நிமிடங்களில் இதில் அனைவரும் மயங்கி விழுந்தனர். குழந்தை சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+