சென்னை ஏர்போர்ட்-லஞ்சம்: சுங்க அதிகாரிகள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விமான நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு சுங்க இலாகாவில் துணை கமிஷனராக பணிபுரிபவர் சுந்தர்ராஜன். அதே பிரிவில் மதிப்பீட்டு அதிகாரியாக ரமணி உள்ளார்.

கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு கூரியர் மூலம் மின்னணு சாதன உதிரிப்பாகம் அனுப்பப்பட்டது. இதுபோன்ற பொருட்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாக இருந்தால் அதை கூரியர் பார்சலில் அனுப்ப முடியாது. புதிய பொருட்களாக இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும்.

பயன்படுத்தப்பட்ட பொருட்களை அனுப்பினால் அதற்கு அபராதத்தோடு சுங்கவரி வசூலிக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்களுக்கு அபராதம் இல்லாமல் சுங்கவரி வசூலிக்க அதிகாரிகள் ரூ.2,500 லஞ்சம் கேட்டனர்.

இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சி.பி.ஐ போலீசார் வழக்குப் பதிவு செய்து மறைந்திருந்து கண்காணித்தனர். அதிகாரிகள் சுந்தர்ராஜன், ரமணி ஆகியோர் ஷாகுல் ஹமீதிடம் இருந்து ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாக பிடிபட்டனர்.

அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு சி.பி.ஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று மாலையில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்க மாறுவேடத்தில் காத்திருந்தனர். மூலம் ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சரக்குப் பெட்டகப் பிரிவில் வைக்கப்பட்டு இருக்கும்.

அந்த பொருட்களை பெறுவோர் வரியை குறைத்து கட்டுவதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் 9 பேர் மற்றும் 2 ஏஜெண்டுகளை கடந்த மாதம் போலீசார் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+