இந்தியாவில் 5000 பேரை பணியமர்த்தும் ஐபிஎம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சர்வதேச அளவில் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் இந்தியாவில் மட்டும் 5000 புதிய பணியாளர்களை அமர்த்துகிறது.
தனது பிபிஓ சேவைப் பிரிவை விரிவாக்கம் செய்வதன் மூலம் இத்தனை பேருக்கு புதிய வேலை வாய்ப்பு தரவிருக்கிறார்களாம்.
சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைக் குரைத்து வரும் நிலையில், இந்தியாவில் பொருளாதார நிலைமை சீராக உள்ளதால், பிபிஓ பணிகளை விரிவாக்குவதாக ஐபிஎம் அறிவித்துள்ளது.
தற்போது மும்பை, ஹைதராபாத், புனே, குர்கான் மற்றும் கொல்கத்தாவில் ஐபிஎம் பிபிஓ கிளைகள் உள்ளன. இந்த கிளைகளை மேலும் விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் யாரையும் வேலை நீக்கம் செய்யும் திட்டமும் இல்லை என ஐபிஎம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications