இந்திய உற்பத்தித் துறையை அழிக்கும் சீனா - எல் அண்ட் டி

ஹாஸிராவில் எல் அண்ட் டியும், இந்திய அரசின் அணுசக்தி கழகமும் இணைந்து ரூ 1750 கோடியில் புதிய தொழிற்சாலையை உருவாக்குகின்றன.
இந் நிறுவன புதிய அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அதன் தலைவர் நாயக் கூறுகையில், "சீனப் பொருள்களை இருப்பு வைத்தால் அதற்கு 25 சதவிகிதம் அளவு வரி விதிக்கிறது சீனா. இதனால் அவற்றை கட்டாயம் பயன்படுத்தியே தீர வேண்டும் என்பதால் இந்தியப் பொருள்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக இந்திய உற்பத்தித் துறையை அழிக்கும் செயல்," என்று தெரிவித்தார்.
"இன்னொரு முக்கியமான விஷயம், நம்மைப்போல மாறும் மதிப்பு கொண்ட கரன்ஸி கிடையாது சீனாவுக்கு. மார்க்கெட் பொருளாதாரமும் கிடையாது. உள்நாட்டில் உற்பத்தி ஆகும் பொருளுக்கு இங்கே வரி விதிக்கிறார்கள். ஆனால், சீனத்து இறக்குமதிகளுக்கு அந்த வரிகள் இல்லை. இதனால்தான் சீனப் பொருள்களுக்கு anti-dumping duty என்ற பெயரில் 25 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. இது நியாயமற்ற ஒரு வணிக நிலை.
குறிப்பாக மின் உற்பத்தித் துறையில் பயன்படும் பெரும்பாலான கருவிகள் இப்போது சீனாவிலிருந்தே வருகின்றன. அப்புறம் எப்படி இந்திய நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்...? சொல்லப் போனால் இந்தியாவுக்காகவே இயங்குகின்றன, சீனாவின் 80 சதவிகித மின்கருவி உற்பத்தி தொழிற்சாலைகள்!
இது நல்லதல்ல... நாட்டின் மின் உற்பத்தி சாதனங்களை கிட்டத்தட்ட முழுமையாக சீனாவில் வாங்கினால், இந்திய நிறுவனங்களுக்கு என்ன வேலையிருக்கிறது..!", என்றார் நாயக்.












Click it and Unblock the Notifications