இந்திய நிலத்தை வேகமாக விழுங்கி வரும் சீனா!

Subscribe to Oneindia Tamil

Indo China Border
டெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா மெதுவாக ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது. கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாம்.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சீனாவின் ரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அதுகுறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம்.

முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் ஏ.கே.சாஹு தலைமை தாங்கினார். ராரணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்னல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+