பணியாளர் வேட்டையில் ஐஓசி-எல்அண்ட்டி

Subscribe to Oneindia Tamil

Indian Oil
மும்பை: இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) நிறுவனம் தனது பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 250 பணியிடங்களை இந்த ஆண்டில் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் இயக்குனர் (ஹெச்.ஆர்) மும்பையில் இதுபற்றி கூறுகையில், 'நாட்டில் உள்ள 10 சுத்திகரிப்பு நிலையங்களிலும் புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களில் 200 பேர் பொறியாளர்களாக இருப்பார்கள். நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 350 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்துவருகிறோம்.

சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், மேலாண்மை, விஞ்ஞான ஆய்வாளர்கள் போன்ற பல மட்டங்களில் மாணவர்களை தேர்வு செய்தோம். அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து ஜூன் மாதம் பணியில் சேருவார்கள்' என்றார்.

பொதுத்துறையின் 'நவரத்தின் நிறுவன'ங்களில் 'மஹாரத்னா' அந்தஸ்த்தில் உள்ள ஐஓசி தற்போது 34 ஆயிரத்து 158 பணியாளர்களுடன் இயங்கிவருகிறது.

ஐஓசி பணியாளர்களுக்கு இந்தாண்டு 15 சதவீத ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அதிகரிப்பை அறிவிக்க உள்ளதாகவும் அகர்வால் தெரிவித்தார்.

20,000 பணியிடங்களை உருவாக்கும் 'எல்ஆண்ட்டி':

இதேபோல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமான எல்அண்ட்டியும் அடுத்த 12 மாதங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20,000 பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது எல்அண்ட்டி குழுமத்தில் மொத்தம் 45,000 பனியாளர்கள் உள்ளனர். இந்தாண்டில் புதிதாக தொழில்நுட்ப பணியாளர்கள் 5,000 பேர், தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் 1,500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

மேலும் இந்நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் முதலீடுகளால் மறைமுகமாக 13 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான பணியிடங்கள் வதோதரா மற்றும் குஜராத்தின் ஹாஸிரா பகுதியில் அமையும் என எல்அண்ட்டி தலைவர் நாயக் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+