ஜன. 15ல் 'அக்னி வளையம்', காணத் தவறாதீர்கள்!

தமிழகத்தின் தென் பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, நாகப்பட்டனம் உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் இதை தெளிவாகவும், முழுமையாகவும் காண முடியும்.
குறிப்பாக தனுஷ்கோடியில் இதை மிகச் சிறப்பாக காண முடியும். இதுதவிர திருவனந்தபுரம், நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, நாகப்பட்டனம் ஆகிய பகுதிகளில் பத்து நிமிடங்கள் வரை காண முடியும்.
கடந்த 45 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் முதலாவது கங்கண சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இதர பகுதிகளில் இதை பகுதி சூரிய கிரகணமாக காணலாம்.
தத்தமது பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதே கிரகணம் எனப்படுகிறது.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் மத்தியப் பகுதியை சந்திரன் மறைக்கும். இதனால் பூமியின் மீது சந்திரனின் நிழல் படிகிறது. அந்தப் பகுதியில் நாம் சூரியனைப் பார்க்க முடியாது. இது சூரிய கிரகணமாகும்.
இதுவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனில் விழும். இது சந்திரகிரகணம்.
முழு சூரியகிரகணத்தின்போது, சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்து விடும். அதேசமயம், கங்கண சூரியகிரகணம் என்பது, சூரியனை முழுமையாக சந்திரன் மறைக்காது. மாறாக, சந்திரனின் விளிம்புகளைத் தாண்டி சூரியனின் ஒளிக்கதிர்கள் காணப்படும். இதனால் அக்னி வளையம் போல அழகுற காட்சி தரும் சூரியன்.
கடைசியாக இதுபோன்ற கங்கண சூரிய கிரகணம், 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இந்தியாவில் தெரிந்தது. அடுத்த கங்கண சூரியகிரகணம் 2019ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி நிகழவுள்ளது.
வருகிற 15ம் தேதியன்று பிற்பகல் 1.17 முதல் 1.25 வரை கங்கண சூரியகிரகணத்தை தமிழகத்தில் காணலாம். தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் இதை மிகத் தெளிவாக காண முடியும். காரணம் இந்தப் பகுதிக்கு அருகில்தான் கிரகணத்தின் மையப் பகுதி வருகிறது என்று எம்.பி. பிர்லா கோளரங்க இயக்குநர் தேபி பிரசாத் துவாரி கூறியுள்ளார்.
கங்கண சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. அது பார்வையைப் பாதித்து விடும். மாறாக, உரிய பாதுகாப்புடன் கண்டு இந்த இயற்கை நிகழ்வை ரசிக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications