Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்திற்கு அரிசி: ரூ. 26 கோடி ஊழல்-தெலுங்கு தேசம்

Subscribe to Oneindia Tamil

Rice
குண்டூர்: தமிழகத்திற்கு 2 லட்சம் குவிண்டால் அரிசி வழங்கியதில் ரூ. 26 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவ பிரசாத் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து குண்டூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்திற்கு அரிசி வழங்குவதற்காக அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்திடமிருந்து அரிசியைப் பெறுவதற்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130 லஞ்சம் கேட்டுப் பெற்றுள்ளனர்.

அரிசி ஆலை அதிபர்கள் சங்கத்தினர், உணவுக் கார்ப்பரேஷன் வழங்கும் விலையை விட (குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1770) 100 ரூபாய் குறைத்துத் தருவதாக கூறியதை ஆந்திர மாநில சிவில் சப்ளைஸ் துறை ஏன் ஏற்கவில்லை என்பது தெரியவில்லை.

அதற்குப் பதில் குவிண்டாலுக்கு ரூ. 130 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதன் மூலம் ரூ. 26 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

ஆந்திராவிடமிருந்து பெறும் அரிசிக்காக தமிழக அரசு எவ்வளவு விலை தருகிறது என்ற விவரத்தை முழுமையாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+