பிரதமரிடம் தரூர் விளக்கம் - காங். சமாதானம்
டெல்லி: ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சவாளி எம்.பி. பேசிய பேச்சை மறுத்துப் பேசாமல் கிட்டத்தட்ட ஆமோதித்துப் பேசியதால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிந்து போனதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் கடந்த சனிக்கிழமை டெல்லியில் கருத்தரங்கம் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் தலைவராக சசி தரூர் கலந்துகொண்டார்.
பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிக்கு பரேக் என்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவர் முதலில் பேசுகையில், இந்திய வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவின் நலன்களை மட்டும் கவனிப்பதாகவோ, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய ராணுவ ரீதியான அச்சுறுத்தல்களை மனதில் கொண்டதாகவோ (தொலைநோக்குடன்) இருக்கவில்லை.
உலகம் முழுக்க உள்ள நாடுகள் நேர்மை, நாணயத்துடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதி போதனையை வலியுறுத்தும் ஆவணங்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறது, இதனால்தான் சர்வதேச அரங்கில் பல பின்னடைவுகள் இந்தியாவுக்கு ஏற்பட்டு வருகின்றன.
இந்திய நாட்டின் தேவைக்கேற்ற கொள்கையாக இல்லாமல், ஆசிய நாடுகளின் பிரதிநிதித்துவக் கோட்பாடு போல கொள்கைகளை வகுத்ததும் கடைப்பிடித்ததும் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என்று பேசினார்.
அடுத்துப் பேசிய சசி தரூர், பரேக்கின் சில கருத்துகளை என்னால் ஏற்க முடியாவிட்டாலும் பல கருத்துகளை நான் ஏற்கிறேன்; நாங்கள் ஒரே மாதிரியான சிந்தனையோட்டம் உள்ளவர்கள் என்று கூறினார்.
நேரு வகுத்த வெளியுறவுக் கொள்கைகளைத்தான் இந்திய அரசு இதுநாள் வரை கடைப்பிடித்து வருகிறது. அப்படிப்பட்ட நேருவின் கொள்கைகளால் இந்திய நலனுக்கு ஒரு பலனும் இல்லை என்று பரேக் பேசினார், அதை சசி தரூர் வழிமொழிந்தார்; காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துகொண்டு அக் கட்சியின் மூத்த தலைவர் நேருவின் கொள்கைகளையே குறைகூறி விட்டார் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டதால் தரூருக்கு பெரும் சிக்கலாகி விட்டது.
வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் பாஜகவினரின் வாயைத் திறந்து அல்வாவை திணித்து மெல்லவும் வைத்தது போலாகி விட்டது தரூரின் சொதப்பல் பேச்சு. இதைத்தானே நாங்கள் இத்தனை காலமாக சொல்லிக் கொண்டிருந்தோம், இப்போது தரூரே சொல்லி விட்டார் பாருங்கள் என்று கூறி வருகிறது பாஜக.
இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் கடுப்பாகி விட்டது. ஏற்கனவே தரூரின் ட்வீட்டர் செய்திகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏகப்பட்ட சங்கடங்கள் ஏற்பட்டு அதை ஒரு வழியாக சமாளித்த நிலையில் இப்போது நேரு தலையிலேயே கையை வைத்து விட்டாரே என்று தரூர் மீது காங்கிரஸார் கோபம் கொண்டனர்.
தொடர்ந்து அதிகப்பிரசிங்கித்தனமாக, அதி புத்திசாலித்தனமாக கருதிக் கொண்டு பேசுகிறாரே தரூர் என்று காங்கிரஸ் தலைவர்கள் காட்டமாகி விட்டனர்.
இவரெல்லாம் ஏன் அமைச்சராக நீடிக்கிறார் என்றும் பட்டவர்த்தனமாக கேட்கத் தொடங்கி விட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.
இதையடுத்து விளக்கம் அளித்த தரூர், நான் சரியாகத்தான் பேசினேன். ஆனால் மீடியாக்கள்தான் தவறாக, திரித்து வெளியிட்டு விட்டன என்று அப்பாவி மீடியாக்கள் மீது பழியைப் போட்டார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் நேரில் பார்த்து நடந்ததை விளக்கினார். இதையடுத்து தரூர் விஷயத்தை முடித்துக் கொள்ள காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான அபிஷேக் சிங், ஷகீல் அக்தார் ஆகியோர், தான் பேசியதை பத்திரிகைகள் திரித்து வெளியிட்டுவிட்டன என்று சசி தரூர் விளக்கம் அளித்துவிட்டதால் இனி இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று கூறி விட்டனர்.
ஆக, தரூர் பேசியதை செய்தியாக வெளியிட்ட மீடியாக்கள்தான் இப்போது தப்பு செய்து விட்டதாக மாறி விட்டது அல்லது காங்கிரஸ் மாற்றி விட்டது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications