பாமக வென்றால் தான் மக்களை திமுக மதிக்கும்-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

Romdoss
தர்மபுரி: வருங்காலத்தில் திமுக மக்களை மதித்து நடக்க வேண்டுமானால்,​​ பெண்ணாகரம் தொகுதி இடைத் தேர்தலில் பாமகவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜி.கே.எம்.​ ​ தமிழ்க்குமரனை ஆதரித்து நல்லம்பள்ளியில் பிரச்சாரம் செய்து அவர் பேசுகையில்,

திமுக தலைவரும்,​​ முதல்வருமான கருணாநிதி,​​ எப்போதும் நான் வெளியிடும் அறிக்கைக்கு பதில் கூற முடியாமல் திணறுவார்.​ இத்தொகுதியில் பாமக வெற்றி பெற்றால் அதிகாரத்தில் உள்ள திமுக வருங்காலத்தில் மக்களை மதித்து நடக்கும்.

பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தர்மபுரி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை பெற்றுத் தந்தார்.​ முன்னாள் மத்திய அமைச்சர் வேலு தர்மபுரிக்கு ரூ.5 கோடியில் ரயில்வே நிலையம் அமைத்துத் தந்தார்.

பாமகவில் பொது செயலாளர்,​​ தலைவர்,​​ பொருளாளர் பதவிகள் தாழ்த்தப்பட்ட,​​ பிற்படுத்தப்பட்ட,​​ சிறுபான்மையினருக்கே வழங்கப்பட்டுள்ளன என்றார்.

வாக்காளர் எண்ணிக்கை குறைய திமுக சதி காரணம்:

இந் நிலையில் சட்டமன்றத்தில் நேற்று பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே.​ மணி,

தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் பெருமளவு குறைறைந்துள்ளது.​ இதற்கு ஆளும் கட்சியின் சதியே காரணம்.

இந்தியாவில் 18 வயதானவர்கள் வாக்குரிமை செலுத்தும் உரிமை பெறுவர்.​ 2002ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.​ ஆனால் தமிழகத்தில் 52.35 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.​ முந்தைய தேர்தலில் வாக்களித்தவர்கள் பெயர்கள் தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கை 14.5 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்தில் இது சரிந்துள்ளதற்கு ஆளும் கட்சியின் சதியே காரணம் என்றார்​ ​

இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு,​​ வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கும் பணியை தேர்தல் ஆணையம்தான் செய்கிறது என்றார்.

அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில்,​​ வாக்காளர் பட்டியல் நகல் அனைத்துக் கட்சியிடமும் தர வேண்டும்.​ ஆனால் அது தரப்படவில்லை என்றார்.

தொடர்ந்து மணி பேசுகையி்ல், தேர்தல் ஆணையத்தின் பணி என்றாலும் அதை ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அதிகாரிகள்தான் மேற்கொள்கின்றனர் என்றார்.

இதற்கு பதிலளி்த்த அமைச்சர் வீராசாமி:,​ பென்னாகரம் இடைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதைத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுத்தியுள்ளதே தவிர,​​ ஆளும் கட்சியின் கருத்தைக் கேட்கவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+