புதிய சட்டசபையில்.. கருணாநிதி கோரிக்கை
சென்னை: புதிய சட்டப் பேரவையில் நாட்டைப் பற்றிய, மக்களைப் பற்றிய நினைவுடன் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை கோட்டையில் உள்ள சட்டப் பேரவையில் நேற்று முடிவடைந்த கடைசி கூட்டத் தொடரில் அவர் பேசுகையில்,
பேரவையில் ஒரு கருத்தைச் சொன்னால், அந்தக் கருத்தின் பால் எத்தகைய எதிரொலி ஏற்படும், எத்தகைய நிலைமைகள் உருவாகும்., அந்தக் கருத்துகளை சொல்லாமல் இருப்பது நல்லதல்லவா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதை நான் அறிந்த வரையில் என்னுடைய வாழ்க்கையிலும், இந்த சட்டப் பேரவையிலும் கடைப்பிடித்து வருகிறேன்.
பேரவையில் எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று இருக்கின்றன. விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பற்றிப் பேசி மறுபடியும் அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியை இங்கே நான் ஏற்படுத்த விரும்பவில்லை.
அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மறந்து விட்டு நாம் குடிசெல்கின்ற புதிய இடத்திலாவது அந்த நிலை இல்லாமல் நாட்டைப் பற்றிய நினைவு, மக்களைப் பற்றிய நினைவு, இவைகளோடு நம்முடைய பணிகளை அங்கே தொடங்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications