ஆஸி ஹோட்டலில் இந்தியர்கள் நுழைய தடை!

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: மெல்போர்னில் உள்ள ஹோட்டலுக்குள் செல்ல முயன்ற 3 இந்திய இளைஞர்களுக்கு தகுந்த காரணம் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இனப்பாகுபாடு அடிப்படையிலேயே இந்த விரும்பத்தகாத சூழலை தாங்கள் எதிர்கொண்டதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூன்று இந்தியர்கள் மற்றும் மூன்று நேபாளிகள் ஒன்றாக சேர்ந்து மெல்போர்னில் உள்ள சென்டர் லயன் ஹோட்டல் பாருக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து நேபாளத்தைச் சேர்ந்த சுஜன் பதாக் என்ற இளைஞர் கூறுகையில்,

'எங்கள் நண்பர் அபிஷேக் அகர்வால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். அதற்காக பார்ட்டி கொண்டாட திட்டமிட்டோம்.

சென்டர் லயன் ஹோட்டல் பாருக்கு நாங்கள் 6 பேரும் சென்றோம். அப்போது எங்களின் அடையாளத்தை கேட்ட ஹோட்டல் நிர்வாகிகள், எங்களை திரும்பிப்போகுமாறு கூறிவிட்டனர்.

அவர்களிடம் காரணத்தை கேட்டால் எதையும் சொல்லவில்லை. எங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறுவதற்கு சரியான காரணம் எதுவும் கிடையாது.

நாங்கள், ஆசியர்களாக, குறிப்பாக இந்தியர்கள் என்ற அடையாளத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

இதை இனவெறி தொடர்பான அவமரியாதை என்று தான் பின்னர் எல்லோரும் விவரிப்பார்கள்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+