மகாராஷ்டிர மக்கள் மராத்தியில் தான் பேசனும்-ராஜ்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் மராத்தி மொழியில் தான் பேச வேண்டும் என்ற மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
வரும் பிப்ரவரி 27ம் தேதி மராத்தி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் மராத்தி மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தி ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தை மாநிலம் முழுவதும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மக்கள் அலுவலகம், வீடு, ரயில், பஸ், கடைத்தெரு என எங்கு சென்றாலும் மராத்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் ராஜ் தாக்கரே வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனை அமைப்பினர், மும்பை மற்றும் இதர மராட்டிய நகரங்களில் அனைத்து விளம்பர போர்டுகளையும் மராத்தி மொழியில் எழுதுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பால் தாக்கரேயின் சிவ சேனா பாசறையில் உருவாக்கப்பட்டு பிரிந்து வந்த இந்த அமைப்பினர் ரயில்வே மற்றும் பல்வேறு அரசாங்கப் பணிகளிலும் மராத்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் பல்வேறு தருணங்களில் போராட்டங்களையும் வட இந்தியர்கள் மீது தாக்குதல்களையும் நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.