நளினி விடுதலை குறித்து சோனியா தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் - சாமி
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியை விடுவிப்பது குறித்து தனது நிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏற்கனவே நளினிக்கு கருணை காட்டப்பட்டு அதன் பேரில்தான் ஆயுள் தண்டனையாக அவரது தண்டனை மாற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அவருக்குக் கருணை காட்டுவது சட்டவிரோதமாகும். இதைத் தடுத்து நிறுத்த சோனியா காந்தி முன்வர வேண்டும்.
ஆனால் நளினி குறித்து சோனியா காந்தி காட்டி வரும் அசாதாரணமான கவலை மிகவும் வியப்பாக உள்ளது. அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் நளினிக்கு பிறப்பிக்கப்பட்ட தூக்குத் தண்டனை பொருத்தமானதே என்று இரண்டு முறை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி இருந்தும் அவர் மீது கருணை காட்டினார் சோனியா.
ஆனால் தற்போது நளினி விடுவிக்கப்படவுள்ளார் என்ற செய்தி வலுத்து வரும் நிலையில் சோனியா அமைதி காப்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications