சூடான் அதிபர் ஓமர் அல்-பஷீர் மீது ஷூ வீச்சு
கார்டோம்: சூடான் அதிபர் ஓமர் அல்-பஷீர் மீது ஷூ வீசியவர் கைது செய்யப்பட்டார்.
தார்ஃபூர் இனப் படுகொலை தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அதிபர் ஓமர் அல்-பஷீர் கார்டோம் நகரில் கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அடெல் மஹஜோப் என்ற 50 மதிக்கத்தக்க நபர் அதிபரிடம் ஒரு மனு கொடுக்க வேண்டும் என்று கூறவே அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபமடைந்த அவர், தனது காலில் இருந்த ஷூவை கழற்றி அதிபரை நோக்கி ஆக்ரோஷமாக வீசினார். எனினும் ஷூ குறி தவறி அதிபர் மீது படாமல் அருகில் சென்று விழுந்தது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அடெல்லை கைது செய்தனர்.
அதிபரை குறிவைத்து ஷூ வீசிய அடெல் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என பாதுபாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications