பொன்சேகா சுற்றிவளைப்பு-கொல்ல ராஜபக்சே சதி என்கிறார்

அதிபர் தேர்தலில் தோல்விமுகத்தில் இருக்கும் பொன்சேகா கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது பாதுகாவலர்களுடன் தங்கியுள்ளார்.
இந் நிலையில் இந்த ஹோட்டலை ராணுவத்தினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர். தேர்தல் தோல்வியால் பொன்சேகா தப்பிப் போய் விடாமல் தடுப்பதற்காகவும், முடிவு வெளியானவுடன் அவரைக் கைது செய்யும் திட்டத்துடனும் ராணுவத்தை ராஜபக்சே குவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே பெருமளவில் முறைகேடுகளைச் செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானவுடன் என்னைக் கொலை செய்து விடும்படி ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தான் எனது ஹோட்டலைச் சுற்றி ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இங்கு தங்கியிருப்போரையும், அருகில் உள்ள பொதுமக்களையும் வெளியேறுமாறும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எனது உயிருக்கு ராஜபக்சேவால் தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நான் இலங்கையை விட்டு வெளியேற மாட்டேன்.
இந்தத் தேர்தலில் முறைகேடுகள் செய்து தான் ராஜபக்சே வென்றுள்ளார். இந்த வெற்றியை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பு அளிக்கவே ராணுவம்-அரசு:
இந் நிலையில் பொன்சேகாவின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அளிக்கவே அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரவாதம் கேட்கும் பொன்சேகா
ராணுவ முற்றுகையால் ஹோட்டலுக்குள் முடங்கியிருக்கும் பொன்சேகா, தான் வெளியே வந்தால் உயிருக்கு ஆபத்தில்லை, பாதுகாப்பு தரப்படும் என அதிபர் ராஜபக்சே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்படி அளித்தால்தான் தான் வெளியே வர முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications